2025 மே 16, வெள்ளிக்கிழமை

மலையேறிய இளைஞன் திடீர் மரணம்

R.Maheshwary   / 2022 டிசெம்பர் 25 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதத்.எச்.எம்.ஹேவா

சிவனொளிபாதமலைக்கு  யாத்திரைச் சென்ற இளைஞர் ஒருவர், திடீர் சுகயீனமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என நல்லதண்ணிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி.  வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்று  (25_) காலை கந்தகெட்டிய பிரதேசத்தில் இருந்து சிலருடன் சிவனொளிபாதமலைக்கு வருகைத் தந்த 23 வயதான குறித்த இளைஞர்,  அதிகாலை சுகயீனமடைந்து  மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின், உயிரிழந்துள்ளார்.

கந்தகெட்டிய-  மீகஹகிவுல, கரமட்டிய பகுதியைச் சேர்ந்த 23 வயதான கே. எம். ஜனித் காவிந்த இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா-  கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .