Editorial / 2023 மே 03 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

பஸ்ஸில் பயணிக்கும் போது, தன்னுடைய கைப்பையை மறைத்து, மாணவிகளின் மார்பகங்கள் தொட்டு, தொடைகளை தடவினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், அதிபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பளை கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்விப்பயிலும் 14,15 வயதுடைய மாணவிகளிடமே அந்த அதிபர் பாலியல் சேஷ்டையை காண்பித்துள்ளார்.
52 வயதான அதிபர் கலஹா பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்றும் அவருடைய மனைவியும் ஆசிரியை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விரு மாணவிகளின் வாக்குமூலங்கள் மற்றும் நேரில் பார்த்த மாணவர்களின் சாட்சியங்களின் அடிப்படையில் அந்த அதிபர் கைது பொலிஸாரினால் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அந்த அதிபருக்கு எதிராக கல்வி வலயத்தின் ஊடாக ஒழுக்காற்று விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
3 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
6 hours ago