Niroshini / 2021 மே 02 , பி.ப. 05:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.ஏ.எம்.பாயிஸ்
அரநாயக்க - தெபத்கம பிரதேசத்தில், கொரோனா தொற்று நெருக்கடி மத்தியில் ஏற்பாடு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டப்போட்டியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்திருந்த 4 இளைஞர்கள், நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.
பேஸ்புக் நட்பு குழுக்கள் மூலம் தொடர்புகளை ஏற்படுத்தி, இந்த மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியை ஏற்பாடு செய்திருந்ததாக ஆரம்பக்கப்பட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, ஸ்தலத்துக்கு பொலிஸார் விரைந்துள்ளனர். பொலிஸார வருகை தருவதை அவதானித்த அங்கிருந்த பெரும்பாலான இளைஞர்கள், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, அங்கிருந்த 4 இளைஞர் மாத்திரம் கைதுசெய்யப்பட்டனர்.
2 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago