2025 ஜூன் 25, புதன்கிழமை

மீன் விற்ற மூவரை நீதிமன்றில் ஆஜராகும்படி உத்தரவு

Sudharshini   / 2015 செப்டெம்பர் 13 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கு.புஸ்பராஜ், ஆர்.ரமேஸ், எஸ்.சுஜிதா

அனுமதிப்பத்திரமின்றி லொறிகளில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் மூவரை, நாளை 15ஆம் திகதி, நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகும்படி தலவாக்கலை பொலிஸ் நிலைய சூழல் பாதுகாப்பு பிரிவின் அதிகாரி வி.சுந்தராஜ் மற்றும் நகரசபை சுகாதார பிரிவு பரிசோதகர் பி.நரேந்திரகுமார் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

டெங்கு ஒழிப்பு வாரத்தையொட்டி தலவாக்கலை பொலிஸ் நிலைய சுற்றாடல் பாதுகாப்பு பிரிவினர் மற்றும் தலவாக்கலை நகரசபை சுகாதார பரிசோதனை பிரிவும் இணைந்து, நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) தலவாக்கலை நகரில் மேற்கொண்ட சோதனையின் போதே,  மேற்படி மூவருக்கும் எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .