2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வறிய குடும்பங்களுக்கு நிதியுதவி

Sudharshini   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் குறைந்த வறுமானம் பெரும் சமூர்த்தி குடும்பங்களுக்கு, வீடுகளை திருத்தி அமைத்துக் கொள்வதற்காக சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் 10,000 ரூபாய் தொடக்கம் 20,000 ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் முதற் கட்டமாக கேகாலை மாவட்டத்தில் வாழும் 474 சமூர்த்தி உதவி பெறும் வறிய குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வு சனிக்கிழமை (05) மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத்தின் தலைமையில் கேகாலை மாவட்ட காரியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மேற்படி 474 குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கென சப்ரகமுவ மாகாண சபை 6,370,000 ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்துள்ளது. மேலும், இவ்வருட இறுதிக்குள் இரத்தினபுரி கேகாலை மாவட்டங்களில் வாழும் 1,800 வறிய குடும்பங்களுக்கு, அவர்களின் வீடுகளை திருத்தி அமைத்துக் கொள்வதற்கு நிதியுதவி வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

இதேவேளை,வீடமைப்பு திட்டத்தின் கீழ் சப்ரகமுவ மாகாணத்தில் வீடுகளின்றி வறுமைக்கோட்டில் வாழும் குடும்பங்களை இனங்கண்டு சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் சமமான முறையில் சகல வளங்களையும் கொண்ட புதிய வீடுகளை அமைத்து கொடுப்பதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேற்படி மாவட்டங்களில் வீடுகள் இன்றி வறுமை நிலையில் வாழும் குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்து கொடுப்பதற்கான வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் அடுத்த வருடம்(2016) முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன் முதற்கட்டமாக இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் கிராமிய மட்டத்தில் வீடமைப்பு சங்கங்க ஆரம்பிக்கப்படவுள்ளன.  

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .