2026 ஏப்ரல் 29, புதன்கிழமை

வழிகாட்டல் கருத்தரங்கு

Editorial   / 2019 ஜனவரி 18 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராபி சிஹாப்தீன்

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு கடந்த வருடம் தோற்றி, பல்கலைக்கழக நுழைவுக்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு, பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தில், மு.ப. 8.00 மணி  முதல் பி.ப 1.00 மணி வரை (19) நடைபெறவுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முஸ்லிம் மஜ்லிஸினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கருத்தரங்கில், பல்கலைக்கழக பாடநெறி தெரிவு, இணையத்தின்மூலம் விண்ணப்பத்தை நிரப்புவது தொடர்பான பூரண விளக்கம், பல்கலைக்கழகத்தில் பாடநெறிகளைத் தெரிவு செய்வதற்கான  கலந்துரையாடல், அரசாங்கத்தால் வழங்கப்படும் வெளிவாரி கற்கை நெறிகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .