Editorial / 2024 மே 05 , பி.ப. 07:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

மெய்யன்
பன்விலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுலுகங்கை அரத்தன பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 21 வயதான யுவதி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தெல்தெனிய ஆடைத்தொழிற்சாலையில் வேலையை முடித்து விட்டு முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக்கொண்டிருக்கும்போது முச்சக்கர வண்டி வீதியைவிட்டு சுமார் 35 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் முச்சக்கர வண்டியில் பயணித்த திருமணமாகாத யுவதி பலியானார் மேலும் முச்சக்கர வண்டியில் பயணித்த இரு பெண்கள் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மடுல்கலை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
சனிக்கிழமை (05) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் .முச்சக்கர வண்டி சாரதி காயமடைந்த நிலையில் தெல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பன்விலை தவலந்தன்ன ஆகலை தோட்டத்தைச் சேர்ந்த நிலு என்றழைக்கப்படும் செல்வராஜ் சபியா (21)என்ற யுவதியே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.பிரேதப் பரிசோதனைக்காக தெல்தெனிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தெல்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
2 hours ago
8 hours ago
07 Feb 2026
07 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
07 Feb 2026
07 Feb 2026