Princiya Dixci / 2015 செப்டெம்பர் 10 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
-மொஹொமட் ஆஸிக்
விசா வழங்குவதில் இந்தியா ஒரு முறையான சட்டக் கொள்கையை பின்பற்றி வருகின்றது. அனைவரும் அக்கொள்கையை கடைப்பிடிக்க வேண்டுமென இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் செல்வி ராதா வெங்கட்ராமன், வியாழக்கிழமை (10) தெரிவித்தார்.
அக்குறணையில் 'இந்து லங்கா முஸ்லிம் கவுன்சில்' நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய அரசின் சட்டங்களுக்கு அமைய உரிய அதிகாரிகளினால் விசா வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்றார்.
கல்வியியலாளர் ஐ.ஐனுதீனின் முயற்சியினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்து லங்கா முஸ்லிம் கவுன்சிலின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
.jpg)

1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago