2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வேலாயுதம் நாடு திரும்பியவுடன் கூட்டொப்பந்த பேச்சு

Kogilavani   / 2015 செப்டெம்பர் 22 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முதலாளிமார் சம்மேளனத்துக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தை அடுத்தவாரமளவில் இடம்பெறும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள பிரதான தொழிற்சங்கங்களின் ஒன்றான தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் வேலாயுதம் வெளிநாடொன்றுக்கு சென்றுள்ளதால், அவர் இல்லாமல் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்த முடியாது எனவும் அவர் நாடு திரும்பியவுடன் இப்பேச்சுவார்த்தை நடத்தப்படுமெனவும் காங்கிரஸின் தலைவரும் எம்.பி.யுமான முத்து சிவலிங்கம் தெரிவித்தார்.

கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து 6 மாதங்களாகியும் இன்னும்; ஒரு உறுதியான தீர்வு எட்டப்படாதுள்ளது. இம்முறை நடைபெறும் பேச்சு வார்த்தையில் உறுதியான தீர்வு எட்டப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. வேலாயுதம் நாடு திரும்பியதும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .