Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Gavitha / 2015 ஏப்ரல் 25 , மு.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தி.தவராஜ், ரஞ்சித் ராஜபக்ஷ
கொட்டகலை, பெரிய மண்வெட்டி தோட்டத்துக்கு அண்மையில் 150 வருடங்கள் பழமை வாய்ந்த ஆலமரம் வீழ்ந்ததில், ஒரு வீடு முற்றா சேதமடைந்துள்ளதுடன் அந்த வீட்டிலிருந்த 8 பேர் காயமடைந்ந நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் சனிக்கிழமை (25) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இதில் 7 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மேற்படி மரம் சரிந்து வீழ்ந்ததில் வீடு முற்றாக சேதமடைந்துள்ளததுடன் வீட்டுக்குள் இருந்த 8 பேரும் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களின் கூக்குரல் சத்தம் தோட்ட மக்களுக்கு கேட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தோட்ட மக்கள் பாதிக்கப்பட்டவர்களை மீட்டுள்ளனர்.
இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago