Sudharshini / 2015 மே 13 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

-சிவாணி ஸ்ரீ
சப்ரகமுவ மாகாண சபையின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், தெஹியோவிட்ட இங்கிரியாவத்த மற்றும் ருவான்வெல ராஜகி ஆகிய இரண்டு பாடசாலைகளில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டடத்தொகுதிகள் திங்கட்கிழமை (11) திறந்து வைக்கப்பட்டன.
சப்ரகமுவ மாகாண சபையினால் ஒதுக்கப்பட்ட 200 இலட்சம் ரூபாய் நிதி செலவில் இங்கிரியாவத்த மகா வித்தியாலயமும் 330 இலட்சம் ரூபாய் செலவில் ருவான்வெல ராஜகி வித்தியாலயமும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், நாடாளுமன்ற உறுப்பினர் வை.ஜீ.பத்மசிறி, மாகாண சபையின் எதிர்கட்சி தலைவி துஷிதா விNஐமான, மாகாண சபையின் உப தலைவர் சட்டத்தரணி துஷ்மந்த மித்ரபால, மாகாண சபை உறுப்பினர்களான பாராக்கிரம அதாவுத, சுஜித் சஞ்ஜய பெரேரா, நிஹால் பாருக், ருவான்வெல பிரதேச சபை தலைவர் சுதத் மஞ்சுல உட்பட பலர் கலந்துகொண்டனர்.
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
2 hours ago