2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பசறையில் வாக்காளர் அட்டைகள் மாயம்

Sudharshini   / 2015 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா                

பசறையில்  37 வாக்காளர்களின் வாக்காளர் அட்டைகள் காணாமல் போயுள்ளதாக பசறை, மொரட்டுவௌ உப-அஞ்சல் அலுவலக அதிபர் டீ.எம்.குணவதி மற்றும் அப்பகுதிக்கான தபால் விநியோகஸ்த்தர் எச்.எம்.ரஞ்ஜித் ஆகியோர் பசறை பொலிஸ் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (4) முறையிட்டுள்ளனர்.

மேற்படி, உப-அஞ்சல் அலுவலகத்திலிருந்து பசறைக்கு, வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கும் செயற்பாடு செவ்வாய்க்கிமை (4) ஆரம்பிக்கப்பட்டன.  இந்நிலையிலே, தபால் விநியோகஸ்த்தரின்  பொறுப்பிலிருந்த வாக்காளர் அட்டைகளில் 37அட்டைகள் காணாமல் போயுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .