2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட 80 பேர் சரீர பிணையில் விடுதலை

Super User   / 2012 செப்டெம்பர் 04 , பி.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 83 பேரில் மூன்று  பேர் தவிர்ந்த ஏனையோர் இன்று செவ்வாய்க்கிழமை சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி அமரசிங்க முன்னிலையில் இன்று ஆஜர் செய்யப்பட்ட போதே இவர்கள் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிடப்பட்டனர். குறித்த 80 பேரும் தலா 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ய நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த 80 பேரும் நீதிமன்றிற்கு அழைத்து வரப்படாமலேயே பிணை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. சட்டவிரோதமான முறையில் படகுகள் மூலமாக அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல உதவி புரிந்ததாக கூறப்படும் மூவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .