Super User / 2012 பெப்ரவரி 15 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.என்.முனாஷா)
சிலாபத்தில் மீனவர்கள் இன்று புதன்கிழமை மேற்கொண்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கி சூட்டில் மரணமான மீனவருக்காக நீர்கொழும்பு மீனவர்கள் இரண்டு தினங்கள் கடலுக்கு தொழிலுக்காக செல்லாமல் துக்க தினம் அனுஷ்டிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானம் நீர்கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே எடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் மேல் மாகாண அமைச்சர் நிமல் லான்ஸா, பிரதி அமைச்சர் சரத் குமார குணரட்ன , நீர்கொழும்பு மேயர் அன்ரனி ஜயவீர, கத்தோலிக்க மத தலைவர்கள் மற்றும் மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்புக்காக மீனவர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்குவதாக இன்று அறிவித்துள்ள மண்ணெண்ணை மானிய தொகைக்கு நீர்கொழும்பு மீனவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இந்த விசேட கூட்டத்திலேயே இந்த இணக்கம் காணப்பட்டது. "இதனால் நாளைய தினம் முதல் நீர்கொழும்பு எரிபொருள் விற்பனை நிலையங்களில் நீர்கொழும்பு மீனவர்கள் உள்ள ஒரு லீற்றர் மண்ணெண்ணையை 81 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும்.
அதற்கான வேலைத்திட்டம் நாளை காலை அறிவிக்கப்படவுள்ளது" என நீர்கொழும்பு கடற்கரை தெரு ஐக்கிய மீனவர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார் .
இதேவேளை, இன்றைய தினமும் நீர்கொழும்பு நகரின் முக்கிய இடங்களில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் கலகம் அடக்கும் பிரிவினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
47 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
1 hours ago
2 hours ago