2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கைகலப்பு குற்றச்சாட்டில் நைஜீரியப் பிரஜை உட்பட 4 பேருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 19 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா )

கைகலப்புச் சம்பவமொன்று தொடர்பான குற்றச்சாட்டில்  நைஜீரியப் பிரஜையொருவர் உட்பட ஆசிரியரொருவரையும் 2 மாணவர்களையும் எதிர்வரும் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி.அமரசிங்க நேற்று உத்தரவிட்டார்.

மதுபோதையில் வந்த இம்மூவரும் தன்னை தாக்கி தனது கையடக்கத் தொலைபேசியை பறிக்க முயன்றதாக ஏத்துக்கால உல்லாசப் பயணத்துறை பொலிஸாரிடம் நைஜீரியப் பிரஜை முறைப்பாடு செய்தார். இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட இம்மூவரும் நைஜீரியப் பிரஜையே தங்களைத் தாக்கியதாக பொலிஸாரிடம் கூறிய நிலையில் நைஜீரியப் பிரஜையும் கைதுசெய்யப்பட்டார்.

இந்நால்வரும் நேற்று திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு  நீர்கொழும்பு பிரதான நீதவான் உத்தரவு பிறப்பித்தார்.

அத்துடன், சந்தேக நபர்களான ஆசிரியரும் மாணவர்களும் சம்பவம் இடம்பெற்ற வேளையில் மதுபோதையில் இருந்தார்களாவென்பது தொடர்பான பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் பணித்தார்.

இது தொடர்பில் ஏத்துக்கால உல்லாசப் பயணத்துறை பொலிஸார் தெரிவிக்கையில், 

'நேற்றுமுன்தினம் இரவு 9 மணியளவில் நீர்கொழும்பு, ஏத்துக்கால கடற்கரைப் பூங்காவில் தான் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு வந்த இம்மூவரும் தன்னைத் தாக்கி  தனது கையடக்கத் தொலைபேசியை பறிக்க முயன்றதாக இவ் நைஜீரியப் பிரஜை தம்மிடம்; முறைப்பாடு செய்ததாகவும் இதனையடுத்து இச்சந்தேக நபர்கள் மூவரும் கைதுசெய்யப்பட்டனர்.

இவ் நைஜீரியப் பிரஜையே தங்களைத் தாக்கியதாக இச்சந்தேக நபர்கள் மூவரும் தம்மிடம் கூறிய நிலையில் நைஜீரியப் பிரஜையும் கைதுசெய்யப்பட்டார். 

இந்நால்வரும் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்' என்றனர். 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .