2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஹெரோயின் சில்லறை வியாபாரிகள் நால்வருக்கு ஆயுள் தண்டனை

Super User   / 2012 ஓகஸ்ட் 24 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.பாருக் தாஜுதீன்)

கிராண்ட்பாஸ், பாலத்துறை பிரதேசத்தை சேர்ந்த ஹெரோயின் சில்லறை வியாபாரிகள் நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது.

குருசாமி ராமலிங்கம், அந்தோனிமுத்து அலெக்ஸாந்தர், அப்துல் ஹமீட் நாகூர் மற்றும் முத்து ஆனந்தன் ஆகியோர் மீது ஹெரோயின் கடத்தி விற்பனை செய்ததாக 1999 ஒக்டோபர் 9ஆம் திகதி குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

பாலத்துறையில் இவர்களை போதைப்பொருள் பணியக பொலிஸார் கைது செய்தபோது, அவர்களிடமிருந்து 52 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டது.

இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஜயசூரிய, இவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.                                            

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .