2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 62 பேர் பிணையில் விடுதலை

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 06 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           (கே.என்.முனாஷா )

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுகள் மூலம் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 62 பேரை தலா ஒவ்வொருவரையும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்வதற்கு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.எம்.என்.பி.அமரசிங்க இன்று அனுமதியளித்தார்.

அத்துடன், பிணை வழங்கப்பட்டவர்களின் கடவுச்சீட்டுக்களை  நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, இவர்களை சட்டவிரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு  அழைத்துச் செல்ல உதவியதாகக் கூறப்படும் 7 பேரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வடக்கு, கிழக்கு பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகுகள் மூலம் செல்ல முற்பட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இந்த 69 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .