2025 ஜூன் 23, திங்கட்கிழமை

செப்டம்பர் 7ஆம் திகதி கொழும்பில் கே.சி கமலசபேசனின் ஞாபகார்த்த பேருரை

Super User   / 2012 செப்டெம்பர் 05 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி சட்டத்தரணி கே.சி கமலசபேசனின் 5ஆவது ஞாபகார்த்த பேருரை எதிர்வரும் செப்டம்பர் 7ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5.45 மணியளவில் இலங்கை சட்டக் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

கமலசபேசன் பவுண்டேஸனினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நினைவு பேருரையினை ' குடிமகனின் சுதந்திரம், தேசிய பாதுகாப்பு மற்றும் அரசின் சர்வதேச கட்டுப்பாடுகள்' எனும் தலைப்பில் சட்ட மா அதிபர் பாலித பெர்ணான்டோ உரையாற்றவுள்ளார்.

இதன்போது, கமலசபேசன் பவுண்டேஸனின் மூன்றாவது வெளியீட்hன சட்டத்தின் வழியாக நீதி: ஐந்து பொதுச்சட்ட பார்வைகள் எனும் நூல் வெளியிடப்பட்வுள்ளது. எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறவுள்ள பேருரை உள்ளிட்ட ஐந்து நினைவு பேரைகளின் தொகுப்பாகவே இந்நூல் வெளியிடப்படவுள்ளது.

இலங்கை சட்ட முறைமை தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபரான கே.சி.கமலசபேசனின் மதிப்பிட முடியாத பங்களிப்புக்களுக்காக அவரை கௌரவிக்கும் வகையில் அவரின் இலட்சியங்களை சிறிய அளவிலேனும் தொடர்வதை உறுதி செய்வதற்காகவும் கமலசபேசன் பவுண்டேஸன் உருவாக்கப்பட்டது.

இந்த பவுண்டேஸன் இலங்கையில் பொது சட்டத்தினை முன்னேற்றுவதற்காக  தொடர்ந்து உழைத்து வருகின்றது. இதற்காக இந்த துறையில் புலமைப்பரிசில்களை ஏற்பாடு செய்வதுடன் வருடாந்த ஞாபகார்த்த பேருரைகள் மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .