2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கூடாரத்துடன் கார் மோதி 8 மாத குழந்தை பலி

Suganthini Ratnam   / 2012 ஜூன் 14 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலாயத்திற்கு முன்பாகவுள்ள ஜம்பட்டா வீதியில் இன்று வியாழக்கிழமை காலை காரொன்று கூடாரமொன்றுடன் மோதியதில்  8 மாத குழந்தையொன்று பலியானதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.

கலவான, இறக்குவானை பிரதேசத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட இவர்கள் கொச்சிக்கடை திருவிழாவுக்காக அமைக்கப்பட்ட கூடாரத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தபோது இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸ் பேச்சாளார் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.  கூடாரத்துடன் மோதிய இக்காரின் சாரதி காரை விட்டு தப்பிச்சென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .