2025 ஜூன் 26, வியாழக்கிழமை

138 ஆம் வழித்தட தனியார் பஸ்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு

Kogilavani   / 2011 பெப்ரவரி 08 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஒலிந்தி ஜெயசுந்தர)

சட்டத்துக்கு புறம்பான முறையில் அண்மையில் வழங்கப்பட்ட இரண்டு பஸ் பாதை அனுமதிகளை மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மீளப்பெறாதுவிடின் நாளை புதன்கிழமை 138 ஆம் வழித்தடத்தில் ஓடும் பஸ்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

ஹொரணை – கரந்த பஸ் பாதை,   புலத் சிங்கள - புறக்கோட்டை பஸ்பாதை என்பனவே புதிய அனுமதிகள் வழங்கப்பட்ட பாதைகளாகும்.  

மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை,  எந்த நடவடிக்கையும் எடுக்காமையால் 138 ஆம் இலக்க பாதையில் ஒடும் பஸ்களும் நாளை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரசபை புதிய அனுமதிகளை வாபஸ் பெறும்வரை தமது வேலை நிறுத்தம் தொடரும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயவர்தன கூறினார்.

அதிகாரிகளின் அக்கறை குறைவு காரணமாக தனியார் பஸ்கள் நூற்றுக்கு மேற்பட்ட தடவை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதாக அவர் கூறினார்.

மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை தலைவரை பதவியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை தனியார் பஸ் உரிமையாளர்கள் ஈடுபடுவர் என அவர் கூறினார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .