2025 ஜூன் 26, வியாழக்கிழமை

இளைஞர்களின் கல்வி, பயிற்சிக்காக முதலிடுவதன் மூலம் வறுமையையும் வேற்றுமையையும் தடுக்கலாம்: அமைச்சர் டல

Super User   / 2011 மார்ச் 11 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

 

 

இளைஞர் யுவதிகளின் கல்வி மற்றும் பயிற்சிக்காக பெரும் முதலீட்டை செய்வதன் மூலம் வறுமையையும் வேற்றுமையையும் தடுக்க முடியும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

யுனிசெவ் நிறுவனம், இளைஞர் விவகார, திறன்கள் அபிவிருத்தி  அமைச்சின் உதவியின் முன்னெடுக்கவுள்ள  'இளைஞர்கள் - இடைவெளி அடங்கிய யுகம்'  எனும் தலையங்கத்தின் கீழ் 2011 உலகில் சிறுவர்கள் நிலைமை குறித்து வெளியிடப்பட்ட பிரசுரத்தின் வெளியிட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைசசர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சின் கேட்போர் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,

'எந்வொரு நாட்டிலும் பிரதான சக்தி இளைஞர்களின் சக்தியென நாம் நம்புகிறோம். இளைஞர் சமுதாயம் சகல இனங்களையும் முதுகெலும்பாக வர்ணிப்பது முற்றிலும் சரியானது. ஏதேனும் ஒரு காரணத்தால் அது பலவீனமடைந்தால் அதனால் அனைத்து இனங்களும் வீழ்ச்சியடையும்.

அதனால்தான் எமது ஜனாதிபதி இளைஞர் சமுதாயத்தின் பிரச்சினைகளை தீர்க்க மிக ஆர்வம் செலுத்துகிறார்.

அரசாங்கமாகிய நாம்,  இளைஞர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண மேற்கொண்டு வருகிறேர். ஊலக பொருளாhர நிலை காரணமாக ஏற்பட்டுள்ள சங்கடமான நிலைமைக்கு முகம்கொடுப்பதற்காக நம் இளைஞர்களிடம் இலைமறை காயாக இருக்கும் திறமைகளை அபிவிருத்தி செய்ய வேண்டும். ஏதேனும் ஒரு காரணத்தால் நம் வருங்கால சந்ததிகள் தவறான வழியில் சென்றால் அந்த நாடு வேகமான அழிவை நோக்கிச் செல்வதை தடுக்க முடியாது.

இளைஞர் பருவம் வாழ்க்கையில் மிக முக்கியமானதாகும். வறுமையினாலும் முறையயான கல்வி அறிவை பெற முடியாமையினாலும் நிராகரிக்கப்பட்ட இளைஞர்கள் அவ்வயது காலக்கட்டத்திற்குரிய இடைநிலைக் கல்வியை பெறுவது மிகவும் குறைவாக காணப்படுகிறது.

அவர்களின் உழைப்பு சுரண்டலுக்கும்  வீட்டுப்பணிகளுக்கும் ஈடுபடுத்தப்படுவதுடன் வீட்டு சித்திரவதைகளுக்கு ஆளாகும் வாய்ப்பு இவர்களிடையே அதிகமாக காணப்படுகிறது.

பெண் பிள்ளைகள் குறைந்த வயதிலேயே திருமணம் செய்விக்கப்படுவதும் இத்தகையவர்களிடையே அதிகமாகும்.  இவ்வாறு குறைந்த வயதில் திருமணம் செய்யும் பிள்ளைகளிடையே சிசுமரணம், பிரசவத்தின்போதான தாய் மரணம் என்பன அதிகமாக காணப்படுகின்றன.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .