Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 26, வியாழக்கிழமை
Super User / 2011 மே 09 , மு.ப. 06:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
(காந்த்ய சேனாநாயக்க)
கொழும்பு நகர வீதிகளில் வெண்டிக்காய், கத்திரிக்காய் காய்த்திருப்பதை இனி நீங்கள் காணக்கூடும். மின் கம்பங்களில் பாகற்காய் காய் காயத்து தொங்குவதையும் காணக் கூடும்.
ஆனால், அதை பறித்துவிட முற்படாதீர்கள். கொழும்பு மாநகர சபை வளர்க்கும் மரக்கறிகளாக அவை இருக்கலாம்.
ஆம், நகரின் வீதிகள் மத்தியிலுள்ள புற்றரைகளில் மரக்கறிகளை வளர்க்க கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளதாக கொழும்பு மாநகர சபை விசேட ஆணையாளர் ஒமர் காமில் டெய்லி மிரருக்குத் தெரிவித்தார்.
'மக்கள் அவற்றை பறித்தெடுப்பதை தடுப்பதற்காக விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சிகளும் சட்டஅமுலாக்கல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறினார்.
முன்னர் வீதிகளில் இருந்த மலர்கள் மற்றும் ஏனையை தாவரங்களை மக்கள் எடுத்துச்சென்றதாகவும் மக்கள் முறையாக அறிவுறுத்தப்பட்டு, சட்ட அமுலாக்கலும் முறையாக இடம்பெற்றால் மரக்கறிகள் மற்றும் தாவரங்களை எடுத்துச் செல்லப்படுவதை தடுக்கலாம் என அவர் கூறினார்.
வீதிளிலுள்ள புற்தரைகளிமரக்கறிகள் வளர்க்கப்படுவதை கொழும்பு மாநகர சபை ஊக்குவிக்கும். இப்புற்றரைகளுக்கு அனுசரணை வழங்குவோர் அவற்றை அழகாக பராமரிக்குமாறு கோரப்படவுள்ளனர்.
மரக்கறிகள் வளர்ப்பதை ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் கொள்கையைக் கருத்திற்கொண்டு இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எதிர்காலத்தில் ஏனைய மாநகர சபைகளுக்கும் இத்திட்டம் விஸ்தரிக்கப்படலாம் எனவும் ஒமர் காமில் தெரிவித்தார்.
Thilak Monday, 09 May 2011 06:02 PM
அந்த மரக்கறி செடிகளுக்கு தண்ணீர் தேவை என்பதால்தான் வீதிகளில் தண்ணீர் தேங்க வைத்திருக்கிறார்களா?
Reply : 0 0
Niththi Monday, 09 May 2011 06:51 PM
தேங்கி நிற்கும் நீரில் மீன்களும் வளர்க்கலாம்
Reply : 0 0
Ajah Monday, 09 May 2011 07:37 PM
ஆசியாவின் அற்புதம் !!!
Reply : 0 0
xlntgson Monday, 09 May 2011 09:54 PM
Nitthi , விளையாட்டல்ல அதைச் செய்த அன்று தான் நாம் டெங்கு தொல்லையில் இருந்து விடுபட்டோம் என்று நினையுங்கள். நீர் நிலைகளை பாதுகாக்காமல் அவற்றை மூடி விடுவதனால் சூழலுக்கு ஏற்படும் கெடுதலை நாம் அறிவோமா, சுற்றாடல் பாடம் படிப்பித்து அதே பிள்ளைகளை சுற்றாடலில் காணப்படும் நீர்நிலைகள் எல்லாமே டெங்கு உற்பத்தியாகுமிடங்கள் என்று பயங்காட்டுகின்றோம். அழிக்கசொல்றோம்.
குளம், குட்டை, ஊரணி, கண்மாய், குளம், பொய்கை வாவி ஏரி தடாகம் எல்லாம் ஒன்றா இதெல்லாம் வாய்க்கால் ஓடை நதி உபநதி என்றெல்லாம் பிரிவது போல கொசுவை ஒழிக்க இயலா.
Reply : 0 0
Niyas Lanka Tuesday, 10 May 2011 01:10 AM
வரவேற்கத்தக்க திட்டம். இப்போதுள்ள விலைவாசிக்கும் சனத்தொகை பெருக்கத்திற்கும் சிறந்த பயனை தரும், மேலும் இதனை பார்வையிடும் மக்களுக்கு வீட்டு தோட்டத்தில் ஆர்வத்தை உண்டு பண்ணும்.
இத்திட்டம் கொழும்பில் மட்டுமல்ல, வொரு பிரதேச சபைகளூடாகவும் வந்தால் மக்கள் பயன்பெறுவார்கள்.
Reply : 0 0
unmai Tuesday, 10 May 2011 03:53 AM
கட்டாக் காலி மாடுகளுக்கு இனி வேட்டைதான் .
Reply : 0 0
goodheart Tuesday, 10 May 2011 06:11 AM
வீதியோரங்களில் கால்நடைகளை கட்டாமல் விட்டால் சரி
Reply : 0 0
ashraffamra Tuesday, 10 May 2011 12:08 PM
makkal sappida mudiyathu.
Reply : 0 0
Nifra Nifras Wednesday, 11 May 2011 02:07 AM
அப்பாவி மக்களை ஏமாற்றாமல் இருந்தாலே சரி
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
27 minute ago
33 minute ago