2025 ஜூன் 25, புதன்கிழமை

இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி பாடசாலை நேரத்தை நீடிப்பதற்கு எதிர்ப்பு

Super User   / 2012 ஜனவரி 02 , மு.ப. 08:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(யொஹான் பெரேரா)

பம்பலப்பிட்டி இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் பாடசாலை நேரத்தை பிற்பகல் 3 மணிவரை நீடிக்கும் தீர்மானத்திற்கு எதிராக  பெற்றோர்களும் மாணவர்களும் அரசியல்வாதிகள் சிலருடன் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதுவரை பிற்பகல் 1.30 மணிவரை பாடசாலை இயங்கியது. இனிமேல் இதை பிற்பகல் 3 மணிவரை  நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமது கட்சியும் பங்குபற்றவுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் நல்லையா குமரகுருபரன் தமிழ் மிரருக்குத் தெரிவித்தார்.

பாடசாலை நேரத்தை நீடிக்கும் மேற்படி தீர்மானம் குறித்து பெற்றோர்கள் சிலர் தமக்கு அறிவித்ததாகவும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் கலாநிதி குமரகுருபரன் தெரிவித்தார்.
இத்தீர்மானம் அதிபரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு இது குறித்து தீர்மானம் எதையும் மேற்கொள்ளவில்லை எனவும் அவர் கூறினார்.

இவ்விடயம் குறித்து கல்வி அமைச்சு செயலாளருடன் தான் தொடர்புகொண்டபோது,  இவ்வாறான தீர்மானத்தை கல்வி அமைச்சு மேற்கொள்ளவில்லை என அவர் தெரிவித்தாக கலாநிதி குமரகுருபன் கூறினார்.  பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தால்,  இத்தீர்மானத்தை மாற்றுவதற்கு கோருவதற்கு தான் தயார் எனவும் அமைச்சின் செயலாளர் கூறியதாக குமரகுருபரன் கூறினார்.

இது தொடர்பாக பாடசாலை பேச்சாளர் ஒருவரிடம் தொடர்புகொண்டபோது, பெற்றோர்களுடனான சந்திப்பொன்றின்போது அதிபரினால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தார்.  பெற்றோர்கள் பலர் எழுத்து மூலம் இத்தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்ததாகவும் அப்பேச்சாளர் கூறினார்.

தரம் ஒன்று மற்றும் தரம் 13 மாணவர்களுக்கான பாடசாலை நேரம் நீடிக்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி நேர நீடிப்புக்கு எதிராக  நாளை செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணிக்கு ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்

 


You May Also Like

  Comments - 0

  • jeyarajah Monday, 02 January 2012 11:24 PM

    காலை ஆறு மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு பி.ப மூன்று மணிக்கு வரும் பிள்ளைகளைப் பார்த்தால் பாவமாக இருக்கின்றது. அதிபர் காலை ஆறு மணிக்கே பாடசாலை வந்து பி.நேரம் ஆறு மணிக்கு வீடு போகலாம். மாணவிகள் அப்படி செய்ய முடியாது .
    மாணவிகளின் ஆரோக்கியம் அதி முக்கியமானது. மாணவிகளுக்கு பதவி உயர்வு என்று ஒன்று இல்லை.

    கற்றல் கற்பித்தல் இவை இரண்டும் ஒழுங்காக நடக்காமல் நேரத்தைக் கூட்டி என்ன பலன்?

    Reply : 0       0

    jeyarajah Monday, 02 January 2012 11:41 PM

    ஆடத்தெரியாத ............... முற்றம் கோணல் என்றானாம். கற்றல் கற்பித்தல் இரண்டும் அங்கு இல்லை. மாணவிகள் வெளி கல்வி நிலையங்களிலேயே கல்வி கற்கின்றார்கள் என்பது அதிபரும் அறிந்த கசப்பான உண்மை.

    Reply : 0       0

    Kethis Tuesday, 03 January 2012 12:57 AM

    பெற்றோர்கள் கையெழுத்திட்டுக் கொடுத்தது பாடசாலை நேர நீடிப்புக்கு ஆதரவாகவா அல்லது கூட்டத்திற்கு தாம் சமுகமளித்ததை உறுதிப்படுத்துவதற்காக மாத்திரமா?

    Reply : 0       0

    imam Tuesday, 03 January 2012 01:24 AM

    paadasaalaila veedum katti kodunga

    Reply : 0       0

    Mohammed Hiraz Tuesday, 03 January 2012 02:49 AM

    பொதுவாக இருபது நிமிடத்திற்கு மேல் ஒரே விடயத்தை கிரகிக்கும் சக்தியோ ஆர்வமோ மூளைக்கு கிடையாது என்பது ஆய்வாளர்கள் சொல்லும் உண்மை எனவே குறிப்பிட்ட பாடவேலை இருபது நிமிடத்தைவிட அதிகமாக இருப்பதால் எந்த பிரயோஜனமும் மாணவர்களுக்கு கிடையாது!!! அதிகமான ஆசிரியர்கள் கூட பாடவேளையில் ஏதாவது ஒரு வரலாற்றை சொல்லி யாரவது மாணவரை ஏதோ ஒன்றின் நிமித்தம் விசாரித்தென இப்படி பலவிடயங்களிலும் கழியும். கூட்டி கழித்து பார்தால் பாடமெடுப்பது இருபது நிமிடத்தை விட குறைந்த அளவு நேரமே என்பதை அறிந்து கொள்ளலாம் !!! எனவே சுவையாகவும் சுருக்கமாகவும் தெளிவாகவும் பாடங்களுக்குரிய நேரம் ஒதுக்கபடுவதை கொண்டே மாணவர்களை உற்சாக படுத்த முடியுமே ஒழிய, நேர காலத்தை கூட்டுவதால் மாணவர்கள் உற்சாகம் குன்றி சோர்வுதான் ஏற்படும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .