2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வை.எம்.சி.ஏ.யின் இலங்கை பிரிவின் பொன் விழாவை முன்னிட்டு முத்திரை வெளியீட்டு

Super User   / 2012 ஜூன் 10 , மு.ப. 09:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ரமன்)


வை.எம்.சி.ஏ.யின் இலங்கை பிரிவின் தேசிய சபையின் பொன் விழாவை முன்னிட்டு நேற்று சனிக்கிழமை இலங்கை முத்திரை வெளியீட்டு பணியகத்தால் சிறப்பு அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது.

கொள்ளுப்பிட்டியிலுள்ள புனித மைக்கல் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட நிகழ்வொன்றின் போதே அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது. இதன்போது, பிரதி அஞ்சல் மா அதிபரினால் சிறப்பு அஞ்சல் முத்திரை வெளியீட்டு வைக்கப்பட்டது.

வை.எம்.சி.ஏ.யின் இலங்கை பிரிவின் தேசிய தேசிய சபையானது 1962ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இந்த ஆண்டு 50ஆவது ஆண்டை பூர்த்தி செய்வதை முன்னிட்டு சபையினால் நேற்று புனித மைக்கல் தேவாலயத்தில் இறைவனுக்கு நன்றி செலுத்தும் வழிபாட்டை நடத்தப்பட்டது. இதனையடுத்து, பல்வேறு வை.எம்.சி.ஏ சங்கங்களின் நீண்ட கால உறுப்பினர்கள் பாரட்டி கௌரவிக்கப்பட்டது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .