2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

மிருகக் காட்சிசாலையிலிருந்து தலைகள் காணாமல் போனமை தொடர்பில் இருவர் கைது

Super User   / 2012 ஜூன் 10 , பி.ப. 03:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளையிலுள்ள தேசிய மிருகக் காட்சிசாலையின் அதிகுளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த சிங்கம், ஜாகுவார் மற்றும் சிறுத்தை ஆகிய மிருகங்களின் தலைகள் காணாமல் போனமை தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மிருகக் காட்சிசாலையின் பிரதம விலங்கியல் வைத்திய நிபுணர் மற்றும் விலங்கியல் வைத்திய பிரிவு உதவியாளர் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்களாவர்.

சுந்தேக நபர்கள் இருவரையும் கல்கிஸை நீதவான் நிரோஷா பெர்னாண்டே முன்னிலையில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் ஜுன் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதேவேளை, மிருகக் காட்சிசாலையின் விலங்கியல் வைத்திய பிரிவு உதவியாளரிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே பிரதம விலங்கியல் வைத்திய நிபுணர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விசாரணைகளின் போது பிரதான சந்தேக நபரின் அலுவலகத்திலிருந்த முதலைகளின் பற்றகள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹிவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (எம்.எஸ்.பெரேரா)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .