2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தனிப்பட்ட பகையால் இருவரை கொன்றேன்: பிச்சைக்காரர் ஒப்புதல்

Super User   / 2012 ஜூன் 11 , பி.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                 (லக்மால் சூரியகொட)

கொழும்பில் பிச்சைக்காரர்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக கைது செய்யப்பட்ட பிச்சைக்காரர் ஒருவர், தனிப்பட்ட பகைமையின் காரணமாகவே இத்தகைய கொலைகளை தான் செய்ததாக கூறியுள்ளார்.

கொம்பனித்தெரு பகுதியில் பிச்சைக்காரர்கள் இருவரை தான் கொலை செய்ததாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று அவர் ஒப்புக்கொண்டார்.

இப்பிச்சைக்காரர்களின் தலையில் கல்லால் அடித்து தான் கொன்றதாகவும் அவர் கூறினார். கொல்லப்பட்ட ஒருவரின் பணம் முழுவதையும் தான் எடுத்துக்கொண்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

இச்சந்தேக நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என நம்பப்படுவதாகவும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அனா லியனகே எனும் இச்சந்தேக நபரை ஜூன் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .