2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கொழும்பு அந்தோனியார் தேவாலய திருவிழாவை முன்னிட்டு விசேட போக்குவரத்து ஏற்பாடு

Menaka Mookandi   / 2012 ஜூன் 12 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா நாளை புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு நாளைய தினம் பிற்பகல் 2 மணி முதல் தேவாலயத்தை அண்மித்த சில வீதிகள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன என்று பொலிஸ் போக்குவரத்து பிரிவு அறிவித்துள்ளது.

இந்நிலையில், முகத்துவாரம் - கொழும்பு, கோட்டை வீதி (ஹெட்டியாவத்தை சந்தி முதல் கோட்டை வரையான ஸ்ரீ ராமநாதன் வீதி), கொழும்பு, கோட்டையிலிருந்து கொட்டாஞ்சேனை மற்றும் முகத்துவாரம் வீதி (விமலதர்ம கடிகாரத்தூண் சந்தியிலிருந்து ரெக்லமேஷன் வீதி) ஆகிய வீதிகளே மூடப்படவுள்ளன.

இதேவேளை, மேற்படி வீதிகளினூடாகப் பயணிக்கும் வாகனங்களுக்காக மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவித்தல் விடுத்துள்ளனர்.

அந்தவகையில், முகத்துவாரத்திலிருந்து கோட்டை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள், ஹெட்டியாவத்தை சந்தியிலிருந்து இடதுபுறமாகத் திரும்பி ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா மாவத்தை, ஆமர் பாபர் சந்தியினூடாக கொழும்புக்குள் பிரவேசிக்க முடியும்.

அத்துடன், கொழும்பு, கோட்டையிலிருந்து முகத்துவாரம் மற்றும் கொட்டாஞ்சேனை நோக்கிப் பயணிக்கும் வாகனங்கள், விமலதர்ம கடிகாரத்தூண் சந்தியிலிருந்து நேர் வீதி, கேஸ்பா சுற்றுவட்டம், ஆமர் பாபர் சந்தியினூடாக பயணிக்க முடியும்.

மேற்படி தேவாலயத்தின் திருவிழா நாளை மறுதினம் விடியற்காலை வரை நடைபெறவுள்ளதால் திருவிழா முடிவடையும் வரை குறித்த வீதிகள் மூடப்பட்டே இருக்கும் எனவும் திருவிழா நிறைவுபெற்றதும் வழமைபோல் வீதிகள் திறக்கப்படும் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .