2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வட கொழும்பு பிரதேசத்தில் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு: ஜனநாயக மக்கள் முன்னணி

Super User   / 2012 ஜூன் 19 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

காக்கைத்தீவு குடியிருப்பு, பாம் வீதி குடியிருப்பு மற்றும் ரெட் பார்னா குடியிருப்பு ஆகிய வட கொழும்பு பிரதேசங்களில் கால்வாய் சுத்தப்படுத்தல், வடிகால் சுத்தப்படுத்தல், வீதி புனரமைப்பு ஆகிய வேலைத்திட்டங்களை ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான பிரியாணி குணரத்ன, கே.டி.குருசாமி மற்றும் லோரன்ஸ் பெர்னாண்டோ ஆகியோரால் முன்னேடுக்கப்படுகின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி ஊடக பரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது,

"மேற்குறிப்பிட்ட குடியிருப்புகளில் வாழும் மக்கள் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் விடுத்த  வேண்டுகோள்களின் படி, மாநகர சபை பொறியியலாளர்களின் ஒத்துழைப்புடன் இந்த வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த வீதிகளை செப்பனிடும் பணிகளும் பல வருடங்களாக சுத்தப்படுத்தப்படாத வாய்கால்களை சுத்தப்படுத்தும் பணிகளும்  கொழும்பு மாநகர சபை தாழ்நில அபிவிருத்தி சபை மற்றும் சுற்றாடல் காவல்துறை ஆகிய அரச நிறுவனங்களின் ஒத்துழைப்புகளுடன் செய்து முடிக்கப்படுகின்றன.

வீதி புனரமைப்பு பணிகள் முன்னணியின் மாநகர சபை உறுப்பினர்கள் கே.டி.குருசாமி, பிரியாணி குணரத்ன ஆகியோரது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடுகளின் மூலம் நடைபெறுகின்றன.

குறித்த புனரமைப்பு பணிகளை மாநகர சபை உறுப்பினர்கள்  மற்றும் பிரதேச குடியிருப்பாளர்கள்  ஆகியோரின் அழைப்புகளின் பேரில் கட்சி தலைவர் மனோ கணேசன் கடந்த இரண்டு தினங்களாக நேரில் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது".

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .