2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

நீர்கொழும்பு மீனவர்களுக்கு கடற்றொழில் உபகரணங்கள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 ஜூன் 24 , மு.ப. 11:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


( கே.என்.முனாஷா)


நீர்கொழும்பு மீனவர்களுக்கு 60 இலட்சம் ரூபா பெறுமதியான கடற்றொழில் உபகரணங்களை கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் ராஜித சேனாரட்ன நேற்று சனிக்கிழமை வழங்கி வைத்தார்.

உயிர்காப்பு அங்கீகள், உயிர்காப்பு வலயங்கள், முதலுதவித் தொகுதிகள், வரைபடங்கள் மற்றும் படகுகள் இம்மீனவர்களுக்கு வழங்கப்பட்டன. நீர்;கொழும்பு மற்றும் கற்பிட்டி பத்தளம் குண்டுவ பிரதேசங்களை சேர்ந்த மீனவ சங்கங்களுக்கே தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான சிறிய படகுகள் வழங்கப்பட்டன.

கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தின் ஏற்பாட்டில் உணவு மற்றும் விவசாய அமைப்பின் வேலைத்திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு இந்த உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

நீர்கொழும்பு ஜுப்லி மண்டபத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்வில் பிரதியமைச்சர் சரத்குமார குணரட்ன, கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சின் அதிகாரிகள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .