2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் உத்தியோகஸ்தரின் கையை கடித்துவிட்டு தப்பிச்சென்ற பெண்ணுக்கு விளக்கமறியல்

Super User   / 2012 ஜூலை 03 , மு.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                            (லக்மால் சூரியகொட)

நடமாடும் விபசார நிலையமொன்றை முற்றுகையிடுவதற்காக மாறுவேடத்தில் சென்ற பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் கையை கடித்ததாக குற்றம்சுமத்தப்பட்ட பெண்ணை ஜூலை 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரட்ன நேற்று உத்தரவிட்டார்.

இந்நிலையத்தை நடத்தியதாகவும் விபசாரத்திற்காக பெண்களை நியமித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபரான இப்பெண், கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தரின் கையை கடித்தபின் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் அப்பெண்ணையும் இவ்விபசார நடவடிக்கையுடன் தொடர்புடையவராக கூறப்படும் மற்றொரு பெண்ணையும் பொலிஸார கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். மற்றொரு சந்தேக நபரை கைது செய்வதற்கு விசாரணை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை ,விபசார நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கார் ஒன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • படிக்காதவன் Tuesday, 03 July 2012 09:47 AM

    நல்ல வேல வேறெங்கேயும் கடிக்கல.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .