2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வென்னப்புவ பகுதியில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

Super User   / 2012 ஜூலை 08 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                      (எஸ். எம். மும்தாஜ்)

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கம்மல, ஜின்கங்கையை ஒட்டிய காட்டுப் பகுதிக்குள் நடத்திச் செல்லப்பட்ட பாரியளவிலான சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை இன்று ஞாயிற்றுக் கிழமை காலை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். புத்தளம் மாட்ட விஷேட குற்றத்தடுப்பு பிரிவினரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டு சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இந்தச் சுற்றிவளைப்பின் போது இருபத்தியெட்டு பெரல்கள், சட்டவிரோதமாக உற்பத்தி செய்யப்பட்ட 450 போத்தல் கசிப்பு, கோடா பெரல்கள் 48, 8 செப்புக்கம்பி சுருள்களுடன் உற்பத்தி செய்யப்படும் கசிப்பை ஏற்றி இறக்கப் பயன்படுத்தப்பட்ட படகு ஒன்றுடன் மூன்று சந்தேக நபர்களையும் பொலிஸார்  கைது செய்துள்ளனர்.

 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக வென்னப்புவ பொலிசாரிடம் புத்தளம் மாவட்ட விஷேட குற்றத்தடுப்பு பிரிவினர் ஒப்படைத்துள்ளனர். வென்னப்புவ பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .