2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'டெங்கு ஒழிப்பு மாதத்தில் வத்தளை பிரதேச சபை வீதிகளிலிலிருந்து குப்பை அகற்றமாட்டாது'

Super User   / 2012 ஜூலை 11 , பி.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

டெங்கு ஒழிப்பு மாதத்தில் அரசுக்கு சொந்தமான வாகனங்களில் குப்பைகளை கொண்டு செல்வதை தடைசெய்யும் சுற்றரிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளதால், டெங்கு ஒழிப்பு மாதம் தொடங்கிய ஜூன் 25 ஆம் திகதியலிருந்து பிரதேச சபை எல்லைக்குட்பட்ட வீதிகளிலிருந்து குப்பைகளை அகற்றுவதில்லை என வத்தளை பிரதேச சபை தீர்மானித்துள்ளது.

இந்த மாதத்தின்போது, மக்கள் குப்பைகளை கையாள்வது எப்படியென டெய்லி மிரர் கேட்டபோது, இது தொடர்பில் தன்னிடம் தீர்வு எதுவுமில்லை என வத்தளை பிரதேச சபைத் தலைவர் டி அல்விஸ் கூறினார்.

அரசாங்கத்தின் கட்டளையை மீறியதற்காக தண்டனை பெற விரும்பாததனால், டெங்கு ஒழிப்பு மாதம் முடியும்வரை குப்பை அகற்றும் நடவடிக்கைகளில் வத்தளை  பிரதேச சபை ஈடுபட மாட்டாது என அவர் கூறினார்.

வத்தளை பகுதிகளின் வீதிகளிலும் ஒழுங்கைகளிலும் குப்பைகள் கொட்டப்பட்டு சிதறிக்கிடக்கின்றன. (வினீதா எம். கமகே)

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .