2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்புவைத்திருந்த கான்ஸ்டபிள் கைது

Super User   / 2012 ஜூலை 12 , பி.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                            (லக்மால் சூரியகொட)

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவரின் தொலைபேசி மற்றும் சிம் அட்டையை பயன்படுத்தி, போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்ட பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் பன்னிபிட்டியவைச் சேர்ந்த  போதைப்பொருள் விற்பனையாரான சந்தேக  நபர் ஒருவரின் மனைவி முறைப்பாடொன்றை செய்திருந்தார்.

பொலிஸ் போதை ஒழிப்பு பணியகத்தினால் தனது கணவர் 25.10.2010 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாகவும்  அப்பணியகத்தை சேர்ந்த சேர்ந்த அதிகாரிகளால் எடுத்துச் செல்லப்பட்ட இரு தொலைபேசிகளும்  இரு சிம் அட்டைகளும் திருப்பிக் கொடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

முறைப்பாட்டாளரின் வீட்டிலிருந்து எடுத்துச்செல்லப்பட்ட தொலைபேசிகளை பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பயன்படுத்துவதை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகள் மூலம் கண்டறிந்தனர்.

கொழும்பிலுள்ள போதைப்பொருள் விற்பனையாளர்களுடன் மேற்படி சார்ஜன்ட் நெருங்கிய தொடர்புகொண்டிருப்பதும் பொலிஸ் முற்றுகையொன்று குறித்த தகவல் வழங்குவதற்காக போதைப் பொருள் விற்பனையாளரிடமிருந்து அவர் 15,000 ரூபா பணம் பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி பொலிஸ் சார்ஜன்ட் கொழும்பு  கோட்டை நீதவான் நீதிமன்றில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் 50,000 ரூபா பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .