2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

காணி வழக்கிற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றில்

Super User   / 2012 ஜூலை 17 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


காணி வழக்கொன்றிற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இன்று நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திற்கு வருகை தந்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் கணவரும் அரசியல்வாதியும் பிரபல நடிகருமான மறைந்த விஜய குமாரதுங்கவிற்கு சொந்தமான சீதுவை முக்கலங்கமுவவில் உள்ள இரண்டு ஏக்கர் காணி தொடர்பான வழக்கில் தனது இரண்டு பிள்ளைகளின் சார்பாவே  அவர் நீதிமன்றத்திற்கு வருகை தந்திருந்தார்.

குறித்த இரண்டு ஏக்கர் காணியை மறைந்த விஜய குமாரணதுங்கவின் தாயாரான பியட்ரிஸ் கிளேரா தனது பேர பிள்ளைகளான யசோதரா குமாரதுங்க மற்றும் விமுக்தி குமாரதுங்க ஆகியோருக்கு தனது இறுதி விருப்ப பத்திரத்தில் எழுதிவைத்துள்ளார்.

தற்போது அந்த காணியின் ஒரு பகுதி கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், குறித்த காணியின் உரிமையை உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு எடுத்துக்கொள்ளப்பட்மைக்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்வதற்குமே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0

  • im ilyas Wednesday, 18 July 2012 12:31 AM

    தமிழ் மக்களின் பிரச்சினையை நான் வந்தவுடன் தீர்ப்பேன் ...என்று சத்தியம் செய்த ஒரு ஜனாதிபதியும் இன்று வரை தீர்க்கவே இல்லை ... அதற்கு நீங்கள் மாத்திரம் விதிவிலக்கா என்ன???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .