2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

வை.எம்.எம்.ஏ பேரவையின் ஏற்பாட்டில் 'எதிர்கால முஸ்லிம் தலைவர்கள்' எனும் தொனிப்பொருளில் பயிலரங்கு

Super User   / 2012 ஜூலை 17 , பி.ப. 03:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் பட்டதாரி இளைஞர் மற்றும் யுவதிகளைப் பயிற்றுவித்து சமூகத்தின் தலைமை பொறுப்புக்களை ஏற்கக்கூடியவர்களாகவும், சமூகத்தில் உயர் பதவிகளுக்கும்  உருவாக்கும் திட்டத்தின் ஓர் அங்கமாக 'எதிர்கால முஸ்லிம் தலைவர்கள்' என்ற மகுடத்தில் தேசிய ரீதியான மூன்று நாள் வதிவிட பயிலரங்கை அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 27ஆம், 28ஆம் மற்றும் 29ஆம் திகதிகளில் கொழும்பில் ஏற்பாடு செய்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றில் பட்டதாரி பட்டத்துடன் ஆகக் குறைந்தது Lower Division – 2nd Class அல்லது அதற்கு மேற்பட்ட Class பெற்றுள்ள, 22 வயதுக்கும் 26 வயதுக்கும் உட்பட்ட முஸ்லிம் இளைஞர், யுவதிகள் இப்பயிலரங்கில் பங்குபற்றுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் பங்குபற்ற விரும்பும் தகைமையுடைய பட்டதாரிகள் விண்ணப்ப படிவங்களை எதிர்வரும் 2012 ஜூலை 31ம் திகதிக்கு முன்னதாக

தேசிய பொதுச் செயலாளர்
அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவை
63, தெமட்டகொடை வீதி
கொழும்பு – 09, என்ற முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்கப்படுகின்றார்கள்.

விண்ணப்பங்களை www.ymmaconference.org என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து அல்லது தத்தமது பிரதேசங்களிலுள்ள வை.எம்.எம்.ஏ கிளைகளிலிருந்து அல்லது வை.எம்.எம்.ஏ பேரவைத் தலைமையகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .