2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்குள்ளான கான்ஸ்டபிள் விளக்கமறியலில்

Super User   / 2012 ஜூலை 23 , பி.ப. 01:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           (லக்மால் சூரியகொட)

14 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்குள்ளான பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை ஓகஸ்ட் 6 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொம்பனித்தெரு பொலிஸ் நிலையத்தை சேர்ந்த இக்கான்ஸ்டபிள், காலிமுகத்திடலில் வான் ஒன்றில் வைத்து இச்சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சிறுமியுடன் நட்பாகிய பின்னர் கான்ஸ்டபிள் இக்குற்றத்தை புரிந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சந்தேக நபரான பொலிஸ் கான்ஸ்டபிள் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டபோது மேற்படி நபரை பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காட்டினாள்.

இச்சந்தேக நபரை  ஓகஸ்ட் 6 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை பதில் நீதவான் சம்பத் கமகே உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0

  • Kanavaan Monday, 23 July 2012 04:53 PM

    அரசியல்வாதிகளிடமிருந்து போலீஸார் கற்றுக் கொண்ட பாடங்களில் இதுவும் ஒன்றா?.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .