2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மதுபோதையில் விமான நிலையத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஜூலை 26 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

அதிக மதுபோதையில் விமான நிலையத்தில் குழப்பம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில், இந்தியா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த பயணியொருவர் விமான நிலைய பொலிஸாரினால் இன்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பிலியந்தலையைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவர்.  கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

இச்சந்தேக நபர் விமான நிலையத்தில் குழப்பம் விளைவித்ததினால்  பயணிகளும் விமான நிலைய ஊழியர்களும் பாதுகாப்புத் தரப்பினரும் அசௌகரியங்களுக்குள்ளாகியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .