2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோதமாக ஆஸி. செல்ல முயன்ற குற்றச்சாட்டில் 51 பேருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 ஜூலை 29 , மு.ப. 10:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                          (கே.என்.முனாஷா )

நீர்கொழும்பிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட 51 பேரையும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி.அமரசிங்க நேற்று உத்தரவிட்டார்.

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்படுவதாக கடற்படையினருக்கு  கிடைத்த தகவலையடுத்து  31 பேர் நீர்கொழும்பு கடற்பகுதியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின்போது மற்றுமொரு குழுவினர் அவுஸ்திரேலியா செல்லும் முகமாக குறித்த படகில் ஏறுவதற்கு நீர்கொழும்பிலுள்ள வீடொன்றில் காத்திருந்ததாக தெரியவந்தது. இதனையடுத்து அவ்வீட்டிலிருந்த 20 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .