2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

எந்தவொரு மாணவருக்கும் இஸட் புள்ளி பிரச்சினையால் பாதிப்பு ஏற்படுவதற்கு ஜனாதிபதி இடமளிக்கமாட்டார்: டல

Super User   / 2012 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எந்தவொரு மாணவருக்கும் இஸற் புள்ளி பிரச்சினையால் பாதிப்பு ஏற்படுவதற்கு ஜனாதிபதி  ஒருபோதும் இடமளிக்கமாட்டார் என இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும் தெரிவித்தார்.

தெஹிவளையில் அமைந்துள்ள லலித் அதுலத்முதலி தொழில் பயிற்சி நிலையத்திற்கு புதிய மாணவ மாணவிகளை சேர்த்துக்கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் டலஸ் அழகப்பெரும அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

"நாம் இந்த இஸட் புள்ளி பிரச்சினையை எடுத்துப்பார்த்;தால் இந்த இஸட் புள்ளி பட்டியல் வெளிவந்ததன் பிறகு அதை மாற்ற வேண்டும் என்று கோரி சில பேர் நீதிமன்றத்திற்கு போனார்கள் பின்பு நீதி மன்றத்தினால் இவ் இஸட் புள்ளிகளை மாற்றுமாறு உத்தரவிடப்பட்டது. ஆனால் தற்போது அவ்வாறாக நீதிமன்றத்திற்குப் போனவர்கள் பாடசாலை வரை வந்து என்ன சொல்கிறார்கள்.

அரசாங்கம் பிள்ளைகளின் எதிர்காலத்தை சீர்குலைக்க முயற்சி செய்கிறது என்று கூறுகிறார்கள். ஆனால் இஸற் புள்ளிகளால் எந்தவொரு பிள்ளைக்கும் எந்தவிதமான பாதிப்பும் அநீதி ஏற்படுவதற்கும் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் என்று நான் இந்த நாட்டில் ஒரு அமைச்சரவை அமைச்சராகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளருமாகவும் இந் நாட்டில் வாழும் ஒரு பொறுப்புடைய நாட்டுக்குடிமகனாகவும் கல்வி கற்கும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாகவும் மிகவும் பொறுப்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த இஸட் புள்ளி பிரச்சினை குறித்து ஜனாதிபதி தனது விசேட கவனத்தை செலுத்தியுள்ளார். அதனால் பாடசாலை மாணவர்களான நீங்கள், எவரும் சொல்லும் வார்த்தைகளுக்கு ஏமாறாதீர்கள். தாழ்ந்த முறையால் அரசியலில் ஈடுபடும் சிலர் தனது தாழ்ந்த அரசியல் நிர்வாணத்தை மறைப்பதற்காக உங்களைப்பாவிப்பதற்கு முயற்சி செய்வதற்கு இடமுண்டு. அதற்கு காரணம் அதன் மூலம் இந் நாட்டின் கல்வித்துறையில்  மிகப்பெரிய பிரச்சினை இருக்கிறது என்று பொய்யான வதந்தியை உருவாக்குவதன் மூலம் தனது அரசியல் இயலாமையை மறைப்பதற்கு எடுக்கும் முயற்சியே ஆகும்.

எதிர்காலத்தில் வெளிவரும் இஸட் புள்ளிகளால்; எந்தவொரு பிள்ளைக்கும் பாதிப்பு ஏற்படாது என்று நான் மீண்டும் பொறுப்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். அதுவரை அமைதியாக இருக்குமாரு நான் ஒரு தந்தையாக வேண்டிக்கொள்கிறேன்" என்றர்.

தெஹிவளை கல்கிசை நகரபிதா தனசிரி அமரதுங்க, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவர் சட்டத்தரணி லலித் பியும் பெரேரா மற்றும் 1000 இற்கும் மேற்பட்ட புதிய மாணவ மாணவர்களும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .