2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் ராஜகிரிய பள்ளிவாசலில் மீண்டும் தொழுகை

Super User   / 2012 ஓகஸ்ட் 02 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பௌத்த பிக்குகள் உள்ளிட்ட ஒரு குழுவினரின் எதிர்ப்பை அடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மூடப்பட்ட ராஜகிரிய, ஒபேசபுரவிலுள்ள ஜாமியுல் தாருள் ஈமான் பள்ளிவாசல் மிரிஹான பொலிஸாரின் உத்தரவினை அடுத்து இன்று வியாழக்கிழமை இரவு திறக்கப்பட்டது.

குறித்த பள்ளிவாசலில் ரமழான் மாத இரவு நேர தொழுகையான தராவீஹ் தொழுமை இன்று இடம்பெற்ற போது, சுமார் 50 பேர் கொண்ட ஒரு குழுவினர் தொழுகைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பள்ளிசாலை சூழ்ந்துகொண்டனர்.

எனினும், பலத்த பொலிஸ் பாதுகாப்பிற்கு மத்தியில் இப்பள்ளிவாசலில் தராவீஹ் தொழுகை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இச்சமயத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் நேரடி விஜயம் மேற்கொண்டு நிலமைகளை அவதானித்தார்.

இதேவேளை, சிங்கள பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்கு எதிராக செயற்படுவர்களுக்கு எதிராக இதுவரை ஏன அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான் கேள்வி எழுப்பினார்.

பள்ளிவாசல்களுக்கு எதிரான இத்தகைய நடவடிக்கையில் பௌத்த மதத்ததை பின்பற்றும் சிறிய ஒரு குழுவினரே ஈடுபட்டு வருகின்றனர் என அவர் குறி;ப்பிட்டார்

இச்செயற்பாட்டில் ஈடுபடும் இந்த குழுவினர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் பள்ளிவாசல்களுக்கு எதிராக செயற்படுவர்களை கட்டுப்படுத்தலாம் என முஜீபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

புனித ரமழான் மாத்தில் தொழுகை நடவடிக்கையினை தடுக்க முற்படுவது ஒரு மோசமான செயற்பாடாகும். இவ்வாறான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் முன்வராமையானது முஸ்லிம் சமூகத்தில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என அவர்; குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், குறித்த பள்ளிவாசல் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டமொன்று நாளை வெள்ளிக்கிழமை ராஜகிரிய, வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் இடம்பெறவுள்ளது என என முஜீபுர் ரஹ்மான் மேலும தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0

  • sharafdeen Thursday, 02 August 2012 08:20 PM

    தொடர் கதை அமைச்சர்கள் மவ்னம்.

    Reply : 0       0

    Hasan Friday, 03 August 2012 08:12 AM

    இன்னமும் பூனைகள் சூடு காணவில்லை போலும், மீண்டும் மீண்டும் அடுப்பங்கரையை நாடுகிறதே!!!!

    Reply : 0       0

    Keen Eyes Friday, 03 August 2012 08:46 AM

    அமைச்சர்கள் வாய் திறந்தால் பதவிகள் பறி போய் விடும்.

    Reply : 0       0

    ilyas Friday, 03 August 2012 12:39 PM

    இன துவேசத்தின் மற்றுமொரு அடையாளம் தான் இது ............

    Reply : 0       0

    shan Friday, 03 August 2012 12:42 PM

    சென்ற வருடம் பூதம்களால் முஸ்லிம்க்ளின் நோன்புக்கடமை சரிவரசெய்ய முடியாமல் அல்லோலப்பட்டது. இந்த வருடம் எந்த பள்ளியில் தடை வரும் என்ற கவலயில் மக்கள் தொழுகை கடமை செய்ய வேண்டிய நிலைமை ???? முடிவு எப்போது வரும் சுதந்திரம் நம் நாட்டில் உண்டா???

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .