2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தீமிதிப்பு குழியில் விழுந்து தீக்காயங்களுக்குள்ளான பெண் வைத்தியசாலையில்

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 03 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                       (கே.என்.முனாஷா)
நீர்கொழும்பு, தலாதீவு ஸ்ரீதேவி கருமாரி அம்மன் ஆலய வருடாந்த தேர்திருவிழாவினை  முன்னிட்டு இடம் பெற்ற தீமிதிப்பு நிகழ்வின் போது பெண்ணொருவர் தீக்குழியில் விழுந்து தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

கடோல்கலே பிரதேசத்சை; சேர்ந்த 57 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டுள்ளார்.

தீமிதிப்பின் போது குறித்த பெண் அணிந்திருந்த சேலையில் கால் இடறி அவர் தீக்குழியில் விழுந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .