2025 ஜூன் 23, திங்கட்கிழமை

ஆட்கள் இல்லாத வீடுகளில் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 14 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா )

பகல் வேளைகளில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத வீடுகளினுள் புதுந்து ஒரு கோடி ரூபாவுக்கும் மேற்பட்ட பணம், தங்கநகைகள் மற்றும் உபகரணங்களை திருடிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுப் பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபர் 2007ஆம் ஆண்டு முதல் நீர்கொழும்பு, சீதுவை, ஜா-எல, ஏக்கல, கம்பஹா, அஸ்கிரிய, கொட்டுகொட, மினுவாங்கொடை, கெலும்மகர ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் திருட்டில் ஈடுபட்டுவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

இவர் மெத்தை வியாபாரி, மீன் வியாபாரி போன்று நடித்துக்கொண்டு ஆட்கள் நடமாட்டம் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு பின்னர் அந்த வீடுகளில்  திருடி வந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சந்தேக நபரிடம் இருந்து அமெரிக்க, சிங்கப்பூர் டொலர்கள், நகைகள் மற்றும் விலையுயர்ந்த வீட்டு உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறிய பொலிஸார், திருடப்பட்ட நகைகளின் ஒருபகுதி பல்வேறு இடங்களில் அடகு வைக்கப்பட்ட நிலையில்  மீட்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி சந்த கலப்பதி, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஓ.டபிள்யூ சில்வா, நீர்கொழும்பு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி காமினி அல்லவ ஆகியோரின் வழிகாட்டலில் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சுபாஷ் பிரியதர்சன தலைமையிலான குழுவினர் சந்தேக நபரை கைதுசெய்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .