2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தீர்மானம் எடுப்பதிலும் அபிவிருத்தி முயற்சிகளிலும் பெண்களை ஒதுக்கும் நாடுகள் தோல்வி கண்ட நாடுகளாகும்

Super User   / 2012 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


(சரஸி பரணமன்ன)


தீர்மானம் எடுப்பதிலும் அபிவிருத்தி முயற்சிகளிலும் பெண்களை ஒதுக்கும் நாடுகள் தோல்வி கண்ட நாடுகளாகும் என 2010ஆம் ஆண்டு சமாதானத்துக்கான இணை நோபல் பரிசினை வென்ற லைபீரியா நாட்டு பெண்ணான லிமா ஜிப்போவி தெரிவித்தார்.

திட்டங்களை தீட்டுவதற்கும் அவற்றை செயற்படுத்துவதற்கும் இடையே காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்கு பெண்கள் தொடர்பான விடயங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவது முக்கியமாகும் என ஜிப்போவி குறிப்பிட்டார்.

பல்வேறு துறைகளை சேர்ந்த பெண் முக்கியஸ்தர்களை கொண்ட 1325 கிளப், இலங்கை பெண்களின் அந்தஸ்தை உயர்த்துவதற்காக வரைந்துள்ள 'சமாதானம், பாதுகாப்பு, அபிவிருத்திக்கான பெண்களின் வேலைத்திட்டம்' எனும் ஆவணத்தை அறிமுகம் செய்யும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யுத்தம் முடிந்த பின்னர் லைபீரியாவில் காணப்பட்டது போலலே இலங்கையிலும் பல சவால்கள், பிரச்சினைகள் காணப்படுவதாக லிமா ஜிப்போவி கூறினார்.

உள்ளங்களை இராணுவமயப்படுத்தல், வல்லுறவு அதிகரிப்பு, நீதியில்லா வருமான பகிர்வு மற்றும் பெண் தலைமை குடும்பங்களின் அதிகரிப்பு ஆகிய பிரச்சினைகள் யுத்த முடிவில் பெண்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் ஆகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றத்தில் தற்போது காணப்படும் 5 சதவீத பெண்கள் பிரதிநிதித்துவத்தை குறைந்த பட்சம் 20 சதவீதமாக்குவது தமது வேலைத்திட்டத்தில் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க குறிப்பிட்டார்.

1993ஆம் இலங்கையில் வரையப்பட்ட பெண்கள் பட்டயம் இன்னும் நிறைவேற்றப்பட்டவில்லை. அதுபோன்றே பெண்கள் உரிமைகள் சட்டமூலமும் இன்னும் நிறைவேற்றப்பட்டவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.(படங்கள்: பிரதீப் தில்ருக்ஷன)







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .