2025 ஜூன் 23, திங்கட்கிழமை

பொலிஸ் தினத்தை முன்னிட்டு நீர்கொழும்பில் பேரணி

Menaka Mookandi   / 2012 செப்டெம்பர் 01 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)

எதிர்வரும் திங்கட்கிழமை கொண்டாடப்படவுள்ள இலங்கை பொலிஸின் 146ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நீர்கொழும்பில் இன்று சனிக்கிழமை நடைபவணியொன்று நடத்தப்பட்டது.

நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரியின் காரியாலயத்தினால் நாட்டில் இடம்பெற்றுவரும் பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் இந்த நடை பவணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீர்கொழும்பு கடோல்கலே விளையாட்டு மைதானத்தில் இன்று முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமான இந்த நடை பவணி நகரின் பிரதான விதியூடாகச் சென்று நிறைவடைந்தது.

இந்நிகழ்வில் நீர்கொழும்பு பிராந்தியத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட  பொலிஸ் அதிகாரி சந்தன கலப்பதி, உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஓ.டப்ளியு.சில்வா, நீர்கொழும்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி காமினி அல்லவ, நீர்கொழும்பு பிராந்தியத்தின் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், பொலிஸார், பாடசாலை மாணவர்கள், சமய பாடசாலை மாணவர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள்  மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .