2025 ஜூன் 23, திங்கட்கிழமை

உணவுப்பொதியில் ஹெரோயினை மறைத்து கொண்டுசெல்ல முற்பட்டவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2012 செப்டெம்பர் 20 , மு.ப. 11:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கே.என்.முனாஷா)

நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள கைதியொருவருக்கு வழங்குவதற்காக உணவுப்பொதியில் ஹெரோயின் போதைப்பொருளை மறைத்து வைத்து கொண்டுசெல்ல முயன்றதாகக் கூறப்படும் ஒருவரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு மேலதிக நீதவான் டபிள்யூ.கே.துலானி எஸ்.வீரதுங்க நேற்று உத்தரவிட்டார்.

நேற்று புதன்கிழமை பகல் வேளையில் இச்சந்தேக நபர் சிறைச்சாலைக்கு கொண்டு வந்த உணவுப் பொதியில் ஒரு கிராமும்; 60 மில்லிகிராம் கொண்ட போதைப்பொருள்  மறைத்து வைக்கப்பட்டிருந்தமை சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. .

சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது உறவினருக்கு  வழங்குவதற்காகவே சந்தேக நபர் ஹெரோயின் போதைப்பொருளை கொண்டு சென்றதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .