2025 ஜூன் 23, திங்கட்கிழமை

வெள்ளவத்தையில் விபசார நிலையம் முற்றுகை: பொலிஸார்

Super User   / 2012 செப்டெம்பர் 22 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளவத்தையில் மசாஜ் நிலையம் என்ற பெயரில் விபசாரம் நடைபெற்றதாக கூறப்படும் விடுதியொன்றை நேற்று மாலை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இவ்விடுதியின் முகாமையாளர் எனக் கருதப்படும் தெஹிவளையைச் சேர்ந்த நபர் ஒருவரும், பாலியல் தொழிலாளி எனக் கூறப்படும் பெந்தோட்டையைச் சேர்ந்த 28 வயதான பெண்ணொருவரும் இவ்விடுதியை நடத்துவதற்கு உடந்தையாக இருந்தார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இரு பெண்களும் இம்முற்றுகையின்பேது கைது செய்யப்பட்டுள்ளனர்.

முகாமையாளர் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர் தான் அமைச்சு ஒன்றின் செயலாளர் எனக்கூறிக் கொண்டதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர்கள் புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக வெள்ளவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .