2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கொழும்பு மாவட்ட வீட்டு திட்டமொன்றுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிதியுதவி

Super User   / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


16 வீடுகளை கொண்ட வீட்டு திட்டமொன்றை நிர்மாணிக்க கொழும்பு மாவட்டத்தில் செயற்படுத்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நிதியுதவியளித்துள்ளது.

கொழும்பு மாநகருக்கு அண்மையிலுள்ள வெல்லம்பட்டி, கொஹிலவத்தை பிரதேசத்திலேயே இந்த வீட்டு திட்டம் அமையவுள்ளது. இதற்கான நிதியினை ஐக்கிய அரபு எமிரேட்ஸிலுள்ள சார்ஜா சர்வதேச தொண்டு நிறுவனம்  வழங்கியுள்ளது.

இந்த வீட்டு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் அப்துல் ஹமீத் அப்துல் பதா கே அல் முல்லா  பிரதம அதிதயாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

இதேவேளை, இலங்கைக்கான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் அப்துல் ஹமீத் அப்துல் பதா கே அல் முல்லா  பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷவை கடந்த வெள்ளிக்கிழமை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான அபிவிருத்தி, கலாசாரம் மற்றும் அரசியல் உள்ளிட்ட பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .