2025 ஜூன் 23, திங்கட்கிழமை

நீர்கொழும்பு களப்பை பாதுகாக்குமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டப் பேரணி

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 09 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கே.என்.முனாஷா)


நீர்கொழும்பு களப்பை சட்டவிரோதமான முறையில் நிரப்புதல் மற்றும் வண்டல் தாவரங்களை (கடோலான தாவரங்கள்) அழித்தல் ஆகியவற்றுக்கு  எதிர்ப்பு தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை நீர்கொழுப்பில் ஆர்ப்பாட்டப் பேரணி இடம்பெற்றது.

நீர்கொழும்பு ஸ்ரீவிமுக்;தி பெண்கள் அமைப்பின்; ஏற்பாட்டில் நீர்கொழும்பு கொட்டுவ நகரசபை மைதானம் முன்பாக ஆரம்பமான இப்பேரணி, பிரதான வீதி வழியாக நகர மத்தியிலுள்ள மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு வந்தடைந்து அங்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

இவ் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்ட பெருமளவான  பெண்கள் சுலோகங்கள் எழுதப்பட்ட சுலோக அட்டைகளை தாங்கியிருந்ததுடன், எதிர்ப்புக் கோஷங்களையும் எழுப்பினர்.

களப்பு பாதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக மீன் பெருக்கம் குறைந்து  மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீவிமுக்;தி பெண்கள் அமைப்பின் இணைப்பாளர் தீபா சுபாஷினி  தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .