2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கழிவு உலோகங்களிலிருந்து மீள் உற்பத்திகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வு

Super User   / 2012 ஒக்டோபர் 10 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


கழிவு உலோகங்களிலிருந்து மீள் உற்பத்திகளை மேற்கொள்வது தொடர்பிலான கலந்துரையாடல் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு - 10 மருதானையில் அமைந்துள்ள அமைச்சில் இன்று புதன்கிழமை  மேற்படி விடயம் தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது கைத்தொழில் அபிவிருத்தி சபையின் கைத்தொழில் பேட்டைகளிலிருந்து பெறப்படும் கழிவு உலோகங்களை துறை சார்ந்த சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு வழங்குவதன் ஊடாக வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது.

இதனிடையே இவ்வாறான கழிவு உலோகங்களை வழங்கும் பொருட்டு மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகளில் முக்கியமாக சிறுதொழில் முயற்சியாளர்களை உரிய முறையில் கண்டறிந்து பயனாளிகள் தெரிவு செய்யப்படல், உற்பத்திகளின் தரத்தை பேணுதல், விலைகளை தீர்மானிப்பதுடன் உள்ளூர் மற்றும் வெளியூர்களின் அவற்றுக்கான சந்தை வாய்ப்பை உரிய முறையில் பெற்றுக் கொடுத்தல் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதன்போது பிரதியமைச்சர் வீரகுமார திஸநாயக்க, அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, அமைச்சரின் ஆலோசகர் ஜெகராஜசிங்கம், கைத்தொழில் அபிவிருத்திச் சபைத்தலைவர் உதயசிறி காரியவசம், பொதுமுகாமையாளர் ஜஸ்மின் மன்னப்பெரும உள்ளிட்ட துறைசார்ந்த பலரும் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .