2025 ஜூன் 23, திங்கட்கிழமை

டெங்கு காய்ச்சலினால் பாடசாலை மாணவன் பலி

Kogilavani   / 2012 ஒக்டோபர் 26 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                                                     (கே.என்.முனாஷா)
டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பாடசாலை மாணவன் ஒருவன் நேற்று வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

தங்கொட்டுவ பிரதேசத்தை சேர்ந்தவரும் வென்னப்புவ ஜோசப் வாஸ் கல்லூரியில் தரம் ஒன்பதில் கல்விக் கற்றுவந்தவருமான கருகுல சூரிய அன்டனி மகேஸ் பெர்னாண்டோ என்ற 14 வயது மாணவனே டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவனுக்கு கடந்த 20 ஆம் திகதி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டு பின்னர் கடந்த 23 ஆம் திகதி நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்ட மேற்படி சிறுவன் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்ததாக மாணவனின் உறவினர்கள் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .